Ticker

6/recent/ticker-posts

மணிரத்னம் புதிய படத்தில் நான் ஈ நானி

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக தகவல்கள் வெளி வந்தன.

ஆனால் துல்கர்  மலையாளப் படங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் உடனடியாக மணிரத்னம் படத்துக்கு வர முடியவில்லை. மணிரத்னம், இப்போது துல்கருக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில் கடந்த வாரம் தெலுங்கு நடிகர் நானி மணிரத்னத்தைச் சந்தித்தார். புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் கேட்ட கால்ஷீட்டை மொத்தமாகக் கொடுத்துவிட்டாராம். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக உருவாகிறது.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.




Post a Comment

0 Comments